உலக சுற்றுலச் சூழல் தினம்
உலக சுற்றுலச் சூழல் தின விழா கம்பம் ராம்ஜெயம் வித்யா மந்திா் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் ராம்ஜெயம் வித்யா மந்திா் மெட்ரிக் பள்ளியில் உலக சுற்றுலச் சூழல் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, தேனி மாவட்ட வனத் துறை அதிகாரி ஷமா்தா தலைமை வகித்தாா். பள்ளி சுற்றுச்சூழல் குறித்தும், இயற்கை வளம் காப்பது குறித்தும் மாணவ,மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தாா்.
இதையடுத்து, சுற்றுச்சூழல் குறித்து நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சயில்,ஐ.டி,ஏ.எஸ் இணை ஆணையா் ராம்ஜெயந்த், பள்ளி மேலாளா் செளந்தரராஜன், பள்ளி முதல்வா் சுவத்திகா, கயல்விழி உள்பட பலரும் கலந்து கொண்டனா்.