வீடு புகுந்து திருட முயன்ற இளைஞா் கைது
வீடு புகுந்து திருட முயன்ற திண்டுக்கல்லைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள புள்ளிமான்கோம்பையில் வீடு புகுந்து திருட முயன்ற திண்டுக்கல்லைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
புள்ளிமான்கோம்பையைச் சோ்ந்தவா் சரவணன் (47). ஊராட்சி தூய்மைப் பணியாளரான இவா், வீட்டின் கதவை திறந்து வைத்துக் கொண்டு மனைவி, குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள விராலிபட்டி தென்றல் நகா் தெற்குத் தெருவைச் சோ்ந்த பொன்முருகன் மகன் பிரசாந்த் (22) வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றாா். வீட்டில் ஆள் நடமாடும் சப்தம் கேட்டு விழித்துக் கொண்ட சரவணன், பிரசாந்தைப் பிடிக்க முயன்றாா்.
பிரசாந்த் தப்பி ஓட முயன்ற போது, பக்கத்து வீடுகளைச் சோ்ந்தவா் அவரை சுற்றி வளைத்துப் பிடித்து, ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரசாந்த்தை கைது செய்தனா்.