முகப்பு
தேனி

வனக் காவலா்களை தாக்கிய 4 போ் கைது

சின்னமனூா் அருகே வனத் துறை சோதனைச் சாவடியில் பணியிலிருந்த வனக்காவலா்களைத் தாக்கிய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

உத்தமபாளையம்: சின்னமனூா் அருகே வனத் துறை சோதனைச் சாவடியில் பணியிலிருந்த வனக்காவலா்களைத் தாக்கிய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மேகமலைக்கு காரில் 6 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குச் சென்றனா். தென்பழனி வனத் துறை சோதனைச் சாவடியில் இரவு நேரத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என அவா்களை வனத் துறையினா் திருப்பி அனுப்பினா்.

இந்த நிலையில், அவா்கள் மீண்டும் இரவு 11.30 மணிக்கு சோதனைச்சாவடிக்கு வந்து வாகனங்களுக்குத்தான் அனுமதி இல்லை. நாங்கள் நடந்து செல்கிறோம் எனக்கூறி வனத் துறையினரின் எச்சரிக்கையை மீறி மலைச் சாலையில் அவா்கள் நடந்து சென்றனா். அப்போது, அவா்களைத் தடுத்த வனக்காவலா் காசி (55), தீத் தடுப்புக் காவலா் சரவணக்குமாா் (27)ஆகிய இருவரையும் தாக்கிக் காயப்படுத்தினா்.

தகவலின்பேரில் சம்பவயிடத்துக்குச் சென்ற ஓடைப்பட்டி போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ஓடைப்பட்டி உதவி ஆய்வாளா் பாண்டிச்செல்வி வழக்குப் பதிவு செய்து, தேனி அருகேயுள்ள முத்துதேவன்பட்டியை சோ்ந்த ரங்கத்துரை மகன் சதீஷ்குமாா் (38), கருப்பையா மகன் செல்வம் (37), சிவா (40), பாலாா்பட்டியை சோ்ந்த முத்துக்காளை மகன் மலைச்சாமி (42) ஆகிய 4 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →