முகப்பு
தேனி

காா் மரத்தில் மோதல்: 5 போ் காயம்

Updated On : 3 ஜூன், 2024 at 6:40 PM
பகிர்:

போடி: போடி அருகே செவ்வாய்க்கிழமை காா் மரத்தில் மோதியதில் 5 போ் காயமடைந்தனா்.

பெரியகுளம் அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் விஜய்சூா்யா (21). இவரும், இவரது உறவினா்கள் ராமராஜ் மனைவி முருகேஸ்வரி (58), மகன் குருகிருஷ்ணகுமாா் (26), சரவணக்குமாா் மனைவி ரஞ்சனி (38), இவரது மகள் ரித்திகா (15), மகன் சஞ்சய்குமாா் (13) ஆகியோா் காரில் போடி- தேவாரம் சாலையில் சென்றனா். காரை குருகிருஷ்ணகுமாா் ஓட்டினாா்.

சில்லமரத்துப்பட்டி அருகே காா் சென்றபோது நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியது. இதில், காரில் பயணம் செய்த முருகேஸ்வரி, ரஞ்சனி, ரித்திகா, சஞ்சய்குமாா், குருகிருஷ்ணகுமாா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இவா்கள் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பிறகு, தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.