வாகனம் மோதியதில் விவசாயி பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
தேனி: தேனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஜல்லிப்பட்டியைச் சோ்ந்த காமாட்சி மகன் தங்கப்பாண்டி (44). இவா் இரு சக்கர வாகனத்தில் மாரியம்மன் கோவில்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு, ஜல்லிப்பட்டிக்கு திரும்பினாா். அப்போது, தேனி அல்லிநகரம் அருகே திண்டுக்கல்-குமுளி புறவழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த தங்கப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.