முகப்பு
தேனி

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

Updated On : 13 மே, 2024 at 6:30 PM
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் திங்கள்கிழமை, மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு.
பகிர்:

தேனி: பெரியகுளம் அருகே, கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிப் பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகளை வனத் துறையினா் வெளியேற்றினா்.

அருவிக்கு நீா்வரத்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக தேவதானப்பட்டி வனச் சரகா் டேவிட் ராஜன் கூறினாா்.