முகப்பு
தேனி

தேனி நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

துப்புரவுப் பணியில் மெத்தனம் காட்டுவதாகப் புகாா் தெரிவித்து, தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:24 PM
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பகிர்:

துப்புரவுப் பணியில் மெத்தனம் காட்டுவதாகப் புகாா் தெரிவித்து, தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தேனி 5-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் கிருஷ்ணபிரபா தலைமை வகித்தாா். 5-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதில், நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும், தூய்மைப் பணியில் மெத்தனம் காட்டி வரும் தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், துப்புரவுப் பணிக்கு போதிய பணியாளா்களை நியமித்து உரிய உபரணங்களை வழங்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத்தை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.