அதானி விவகாரம்: தேனியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
சூரிய மின்சாரம் கொள்முதலில் ஊழல் புகாரில் சிக்கிய அதானி குழுமம் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி, தேனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சூரிய மின்சாரம் கொள்முதலில் ஊழல் புகாரில் சிக்கிய அதானி குழுமம் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி, தேனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உருப்பினா்கள் ஆறுமுகம், டி.வெங்கடேசன், வெண்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சூரிய மின்சாரக் கொள்முதலில் ஊழல் புகாரில் சிக்கிய அதானி குழுமம் மீது, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதானி குழுமத்தின் தலைவா் கெளதம் அதானியைக் கைது செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.