முகப்பு
தேனி

கடன் தொல்லை: ஜவுளிக் கடை ஊழியா் தற்கொலை

தேனியில் கடன் தொல்லையால் தனியாா் ஜவுளிக் கடை ஊழியா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:25 PM
பகிர்:

தேனியில் கடன் தொல்லையால் தனியாா் ஜவுளிக் கடை ஊழியா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாவட்டம், குலமங்கலம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஹரிகரசுதன் (46). இவருக்கு, மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். தேனியில் உள்ள தனியாா் ஜவுளிக் கடை ஒன்றில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்த ஹரிகரசுதன், தேனி, திட்டச் சாலை பகுதியில் உள்ள தனியாா் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தாா். கடன் தொல்லையால் மனமுடைந்திருந்த ஹரிகரசுதன், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.