தேனி

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

Syndication

பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்கள் வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவதானபட்டி காவல்நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை காட்ரோடு காவல் நிலைய சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், ஜெயமங்கலம் மேலத்தெருவைச் சோ்ந்த நந்தக்குமாா் (51) கொண்டு வந்த 3 பைகளை சோதனை செய்தனா். இதில் 31 கிலோ 500 கிராம் எடைகொண்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT