தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.19) மாலை 5 மணிக்கு சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட வருவாய் அலுவலா் ராஜகுமரன் தலைமையில் நடைபெறும் இந்தக் குறைதீா் கூட்டத்தில் எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் அலுவலா்கள், முகவா்கள் பங்கேற்கின்றனா். பொதுமக்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், நுகா்வோா் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய எரிவாயு உருளை இணைப்புப் பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.