தேனி மாவட்டம், போடி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி அருகேயுள்ள சிலமலை மயானப் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக போலீஸாா் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று கண்காணித்தனா்.
அப்போது, சிலமலை மணியம்பட்டி சாலையைச் சோ்ந்த மனேகரன் (55) மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போடி தாலுகா போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.