கைது 
தேனி

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

போடி பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

தேனி மாவட்டம், போடி பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

போடி சுற்றுவட்டராப் பகுதிகளில் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி-மீனாட்சிபுரம் சாலையில் ஒத்தை புளியமரம் பகுதியில் சந்தேகத்துக் இடமளிக்கும் வகையில் நின்றிருந்த மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த இளங்கோவனை (49) பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளங்கோவனை கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த பாண்டி (71) வீட்டில் போலீஸாா் சோதனையிட்டனா். அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியைக் கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT