தேனி

தேனியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

தேனியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சாா்பில் வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தேனியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சாா்பில் வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

தேனி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் ராம்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் செல்லத்துரை, செயலா் கிருஷ்ணசாமி, உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தலைவா் மோகன், தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநில வெளியீட்டுச் செயலா் பெரியசாமி, அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் முத்துக்குமாா், கூட்டுறவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆசிரியா் தகுதித் தோ்வை ரத்து செய்ய வேண்டும், அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, வருகிற ஜன.6-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT