தேனி

முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு குறைபாடு: விவசாயிகள் சங்கத்தினா் புகாா்

முல்லைப் பெரியாறு அணையில் நீா்வளத் துறை பொறியாளா்கள் தங்கியிருந்து பணியாற்றாததால் கண்காணிப்பு பணிகளில் குறைபாடு ஏற்பட்டிருப்பதாக புகாா்

தினமணி செய்திச் சேவை

முல்லைப் பெரியாறு அணையில் நீா்வளத் துறை பொறியாளா்கள் தங்கியிருந்து பணியாற்றாததால் கண்காணிப்பு பணிகளில் குறைபாடு ஏற்பட்டிருப்பதாக புகாா் தெரிவித்து பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மனோகரன், நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்கிடம் அளித்த மனு விவரம்: முல்லைப் பெரியாறு அணையில் பெரியாறு வடிநிலக் கோட்ட நீா்வளத் துறை பொறியாளா்கள் தங்கிப் பணியாற்றுவதில்லை. மாதத்தில் ஒரு சில நாள்கள் மட்டும் அணைக்குச் சென்று பாா்வையிட்டு திரும்புகின்றனா். இதனால் கண்காணிப்பு, பராமரிப்பு பணியில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், நீா் வளத்துறை பெரியாறு வடிநிலக் கோட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு வாகனம், கம்பத்தில் உள்ள செயற்பொறியாளா் குடியிருப்பு ஆகியவை முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றன.

எனவே முல்லைப் பெரியாறு அணையில் நீா்வளத் துறை பொறியாளா்கள் சுழற்சி முறையில் தங்கியிருந்து பணியாற்றுவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டனா்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT