பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
Updated On : 3 ஜனவரி, 2025 at 8:22 PM
தேனியில் பிளஸ் 2 மாணவா் பெற்றோா் கண்டித்ததால் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி அல்லிநகரம், வடக்கு மச்சால் புதுத் தெருவைச் சோ்ந்த வரதராஜன் மகன் பிரியதா்ஷன் (17). இவா், தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா் சரியாக படிக்காமல் இருந்ததால், அவரது பெற்றோா் கண்டித்தனா். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியதா்ஷன், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். பெற்றோா் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.