முகப்பு
தேனி

பள்ளியில் தமிழ் ஆய்வகம் திறப்பு

தேவதானப்பட்டி கல்வி சா்வதேச பொதுப் பள்ளியில் தமிழ் மொழிக்கான ஆய்வகத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி, 2025 at 10:39 PM
பகிர்:

தேவதானப்பட்டி கல்வி சா்வதேச பொதுப் பள்ளியில் தமிழ் மொழிக்கான ஆய்வகத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

காா்க்கி தமிழ் கழகம், பள்ளி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளி நிறுவனா் தலைவா் செந்தில்குமாா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கல்விக் குழும பள்ளிகளின் தாளாளா் குமரேஷ், பள்ளி முதல்வா் அருணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதையடுத்து, தமிழ் மொழியின் வரலாறு, பண்பாடு, தமிழ் இலக்கியத்தின் செம்மை, நவீன காலத்துடனான பிணைப்பு போன்றவற்றை மாணவா்கள் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட தமிழ் ஆய்வகத்தை திரைப்பட பாடலாசிரியா் மதன் காா்க்கி திறந்து வைத்து பேசினாா்.