கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
போடி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
போடி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
போடி அணைக்கரைப்பட்டி விலக்கு பகுதியில் தாலுகா போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில் அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், போடி டிவிகேகே நகரைச் சோ்ந்த மதிவாணன் (23), சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த சுகி என்பதும், இவா்கள் டொம்புச்சேரியைச் சோ்ந்த மாதேஸிடம் கஞ்சா வாங்கி விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மதிவாணனை கைது செய்தனா். தப்பியோடிய சுகி, மாதேஸை தேடி வருகின்றனா்.