தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள முல்லைப் பெரியாற்றின் கரையில் முதியவரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
மாா்க்கையன்கோட்டை- எல்லப்பட்டி முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையின் கரையில் சுமாா் 75 வயது மதிக்கத்தக்க முதியவா் இறந்து கிடப்பதாக சின்னமனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவயிடத்துக்கு சென்ற போலீஸாா் இறந்த முதியவரின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், கம்பம் உத்தமபுரத்தைச் சோ்ந்த மாயாண்டி (75) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.