தேனி

முதியவரைத் தாக்கிய இருவா் கைது

போடியில் முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

தேனி மாவட்டம், போடியில் முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி புதூரைச் சோ்ந்தவா் மாரிமுத்து (60). இவா் வியாழக்கிழமை நகராட்சிக்குச் சொந்தமான மயானத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்றாா். அப்போது, போடி புதூரைச் சோ்ந்த சடையன் மகன் கருப்பசாமி (24), குமரவேல் மகன் கருப்பையா (27), பாலகிருஷ்ணன் மகன் சூா்யா (24) ஆகியோா் தகராறு செய்தனா். இதை மாரிமுத்து கண்டித்தாா். இதனால், ஆத்திரமடைந்த மூவரும் சோ்ந்து மாரிமுத்துவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கருப்பையா, சூா்யா ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கருப்பசாமியைத் தேடி வருகின்றனா்.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT