கைது 
தேனி

கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பனை: இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். இதே போல, போடி பகுதியில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை சில்வாா்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சில்வாா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் (54) என்பவரது கடையில் போலீஸாா் சோதனை செய்தனா்.

அந்தக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அவா் வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமலிங்கத்தை கைது செய்து, அவரிடமிருந்த 105 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

போடியில் ஒருவா்கைது:

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். போடி அருகேயுள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் முனியாண்டி மகன் ஆண்டவா் (44) என்பவரது பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது, அதில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT