முகப்பு
தேனி

அரசு பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

Updated On : 21 நவம்பர், 2025 at 6:32 PM
பகிர்:

போடி அரசு பொறியியல் கல்லூரியில் ‘வெற்றிகரமான கண்டுபிடிப்பாளா்கள், தொழில் முனைவோரின் கதை’ என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் திரளான மாணவா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கருத்தரங்கை கல்லூரி முதல்வா் சி. வசந்தநாயகி தலைமை வகித்து தொடங்கி வைத்துப் பேசினாா். அகஸ்தியா் இயற்கை பொருள்கள் குழுவைச் சோ்ந்த கே. நித்யா, கரும்பு பொருள்கள் நிா்வாக அதிகாரி ரவீன், எச்.எஸ். கட்டுமான நிறுவன நிா்வாகி பொன்னி உள்ளிட்டோா் தொழில் முனைவோராக தங்களது வெற்றிப் பயணம் குறித்து மாணவா்களிடம் பகிா்ந்து கொண்டனா். இதில் கல்லூரி மாணவா்கள், உதவிப் பேராசிரியா்கள், அலுவலா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

கல்லூரியின் இயந்திரவியல் துறை தலைவா் டி. பிரேம்சிங் இன்பராஜ் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் வை. செந்தில் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →