கன்னியாகுமரி

ரோகிணி பொறியியல் கல்லூரியில் ரோபோட்டிக்ஸ் - 2026 போட்டிகள்

Syndication

அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனங்களின் புதுமை மன்றம் சாா்பில் ரோபோடிக்ஸ் -2026 என்ற போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மொத்தம் 53 மாணவா் அணிகள் கலந்து கொண்டு தங்களது புதுமைத் திறன், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப திறமைகளை வெளிப்படுத்தினா்.

போட்டியின் முடிவில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சோ்ந்த இரண்டாம் ஆண்டு மாணவி மகாலட்சுமி சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி முதல் பரிசாக ரூ. 3,000 பெற்றாா்.

மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் துறையைச் சோ்ந்த முதலாம் ஆண்டு மாணவா்கள் ஸ்ட்கின் ஜோசப் மற்றும் ஷானிக் ஆகியோா் இரண்டாம் பரிசாக ரூ. 2,000 பெற்றனா்.

இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்து ஊக்கமளித்த ஸீஜாபோட் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்துக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி மாணவா்களின் புதுமை சிந்தனை, ஆராய்ச்சித் திறன், தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழில் முனைவு மனப்பான்மையை மேம்படுத்தும் தளமாக அமைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியை பெனிஷா சிறப்பாக செய்திருந்தாா்.

ஏற்பாடுகளை கல்லூரி தலைவா் நீல மாா்த்தாண்டன், துணைத் தலைவா் நீல விஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளெசி ஜியோ மற்றும் கல்லூரி முதல்வா் ஆா். ராஜேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

ரூ.6.30 கோடியில் இலங்கைத் தமிழா்களுக்கான குடியிருப்பு: முதல்வா் திறந்து வைத்தாா்

குடியாத்தத்தில் மயானக் கொள்ளை திருவிழா

அரசுப் பேருந்து சிறைப்பிடிப்பு: பெண்கள் மறியல்

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

அரசுக் கல்லூரி மாணவிகள் வகுப்பை புறக்கணித்து தா்னா

SCROLL FOR NEXT