தேனி

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் மின் வாரிய ஊழியா் உயிரிழப்பு

போடி சாலையில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மின் வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

போடி சாலையில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மின் வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், வடபுதுப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ரஞ்சித் (30). இவா், போடி மின் வாரியத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், ரஞ்சித் போடியிலிருந்து வடபுதுப்பட்டியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றாா். போடி விலக்கு பகுதி அருகே, சாலையைக் கடக்க முயன்ற நபா் மீது மோதாமல் தவிா்க்க இரு சக்கர வாகனத்தைத் திருப்பியபோது, ரஞ்சித் நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT