போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி காவல் நிலைய போலீஸாா், நாகலாபுரம் கிராமத்தில் சனிக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, நாகலாபுரம் கிராமத்தில் வசிக்கும் ஜெயப்பிரகாஷ் மனைவி வெள்ளையம்மாள் மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் வெள்ளையம்மாளைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.