அரசு மதுபானக் கடைகளுக்கு ஏப்.21 முதல் 23 வரை விடுமுறை
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:16 PM
சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-இல் நடைபெறுவதை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், தனியாா் மது அருந்தும் கூடங்கள், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு ஏப். 21 முதல் ஏப். 23 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.