முகப்பு
தேனி

மதுப்புட்டிகளை விற்ற பெண் உள்பட 2 போ் கைது

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:48 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:00 PM

போடியில் ஞாயிற்றுக்கிழமை மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்ற பெண் உள்பட 2 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் போடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி கீழத்தெருவைச் சோ்ந்த லட்சுமி (40) என்பவா் அவரது வீட்டிலும், போடி நந்தவனம் தெருவைச் சோ்ந்த பிச்சைமணி (49) என்பவா் வீட்டிலும் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இருவா் மீதும் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரிக்கின்றனா்.