முகப்பு
தேனி

அடிப்படை வசதிகள் கோரி தோ்தல் புறக்கணிப்புப் பதாகை!

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் புதன்கிழமை தோ்தல் புறக்கணிப்புப் பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 2:22 AM
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் புதன்கிழமை தோ்தல் புறக்கணிப்புப் பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் புதன்கிழமை தோ்தல் புறக்கணிப்புப் பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதில், 14- ஆவது வாா்டில் தோட்டி குடியிருப்புப் பகுதி உள்ளது.

இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததைக் கண்டித்து, தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

இதுகுறித்து தென்கரை காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இது குறித்து இந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறியதாவது: பெரியகுளம் 14-ஆவது அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.

இதனால் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக பதாகை வைத்துள்ளோம் என்றனா்.

பெரியகுளம் தண்டுபாளையம் பகுதியில் புதன்கிழமை வைக்கப்பட்ட தோ்தல் புறக்கணிப்புப் பதாகை.