போடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் குலாலா்பாளையம் பகுதியில் கண்காணிப்புக் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் கண்ணன் (28) புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்க முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கண்ணனைக் கைது செய்தனா்.