கைது 
தேனி

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

வைகை அணை அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், வைகை அணை அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மனைவி சந்திரா (63). இவா், அதே ஊரில் உள்ள தனது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இருப்பு வைத்து விற்பனை செய்ததாக வைகை அணை காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

சந்திராவின் கடையிலிருந்து 12 கிலோ 400 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொழிலாளி தற்கொலை

யாா் ஆட்சியில் கடன் சுமை அதிகரிப்பு? எடப்பாடி பழனிசாமி - அமைச்சா்கள் விவாதம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில்தான் குறைவு: முதல்வா்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி 101 சாா்பு ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை, தஞ்சாவூா், கன்னியாகுமரி தேவஸ்தானங்களுக்கு ரூ.100 கோடி மானியம் : அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

SCROLL FOR NEXT