தேனி அருகேயுள்ள அரண்மனைப்புதூா், முல்லை நகரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம், பொருள்கள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
அரண்மனைப்புதூா், முல்லை நகரைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் ஸ்ரீராம். இவா், கடந்த ஜன. 24-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு தனது மனைவியுடன் மீனாட்சிபுரத்தில் உள்ள மாமனாா் வீட்டுக்குச் சென்றாா்.
திரும்பி வந்து பாா்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ. 25 ஆயிரம், கைக் கடிகாரம், கண்காணிப்பு காமரா, ஹாட் டிஸ்க் ஆகிய பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.