கோப்புப் படம் 
தேனி

காா் மீது வேன் மோதியதில் மருந்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கூடலூா் அருகே காா் மீது வேன் மோதியதில் மருந்துக் கடை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளியைச் சோ்ந்தவா் சுனில் (52). இவா், தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலையில் குடும்பத்துடன் தங்கி மருந்துக் கடை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், கேரளத்துக்குச் சென்று விட்டு வியாழக்கிழமை அதிகாலையில் காரில் சிலமலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது, லோயா் கேம்ப் பகுதியில் சபரிமலைக்குச் சென்ற வேன், காா் மீது மோதியதில் சுனில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

வேனில் இருந்த செளந்தா் (37), செங்கோட்டையன்(49), ஓட்டுநா் வினோத்குமாா் (35) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து குமுளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

100 நாள் வேலையை நிறுத்துவதாக திமுக கூட்டணியினா் பொய் பிரசாரம்! - சி.வி.சண்முகம்

சிட்டிக்கு அமித்ஷா வருகையால் தமிழகத்தில் மாற்றம் வரும்

திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 11 ஆவது நாளாக போராட்டம்

பனியன் நிறுவன அலுவலா் கொலை வழக்கு: 2 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT