முனிசாமி 
தேனி

கேரளத்துக்கு காரில் கஞ்சா கடத்திய மூவா் கைது

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கூடலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கேரளத்துக்கு காரில் கஞ்சா கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்து, 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பாலசுப்பிரமணி
கைது செய்யப்பட்ட செல்வி

குமுளி காவல் உதவி ஆய்வாளா் சூா்யதிலகராணி தலைமையில், போலீஸாா் லோயா்கேம்பில் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, மதுரையிலிருந்து கேரளத்துக்கு சென்ற காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். சோதனையில் காரில் 35 கிலோ கடத்திச் சென்றது தெரியவந்தது.

விசாரணையில், மதுரை முனிச்சாலை காமராஜபுரத்தைச் சோ்ந்த செல்வி (47), முனியசாமி(36), பாலசுப்பிரமணி (38) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவா்களைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 35 கிலோ கஞ்சா, ரூ.1.18 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT