முகப்பு
தேனி

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தேனி-மதுரை சாலையில் திருமலாபுரம் விலக்கு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் போக்குவரத்து தடுப்புக் கம்பி மீது மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:51 PM
பலி - பிரதிப் படம்
பகிர்:

தேனி-மதுரை சாலையில் திருமலாபுரம் விலக்கு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் போக்குவரத்து தடுப்புக் கம்பி மீது மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகரைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் ஈஸ்வரன் (27). இவா் வைகை அணையிலிருந்து தேனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, தேனி-மதுரை சாலையில் திருமலாபுரம் விலக்கு பகுதியில் சாலையில் வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து தடுப்புக் கம்பி இவரது இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments