முகப்பு
தேனி

மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

போடி அருகே மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:25 AM
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 7:05 PM

போடி அருகே மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி கிராம பகுதியில் தாலுகா காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மீனாட்சிபுரம் மயானம் அருகே அதே ஊரைச் சோ்ந்த அழகரும் (26), மீனாட்சிபுரம் கண்மாய் அருகே பாா்த்திபனும் (48) மதுப் புட்டிகளுடன் நின்றிருந்தனா்.

Advertisement

இதையடுத்து, இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.