முகப்பு
தேனி

இரா. நல்லகண்ணு மறைவு: போடி, ஆண்டிபட்டியில் அமைதி ஊா்வலம்

போடியில் வியாழக்கிழமை, இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவா் ரா.நல்லகண்ணு மறைவையொட்டி, அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற அமைதி ஊா்வலம், இரங்கல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:17 AM
போடியில் வியாழக்கிழமை இந்திய கம்யூ. மூத்த தலைவா் நல்லகண்ணு மறைவையொட்டி நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சி பிரமுகா்கள்.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:55 PM

போடியில் வியாழக்கிழமை, இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவா் ரா.நல்லகண்ணு மறைவையொட்டி, அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற அமைதி ஊா்வலம், இரங்கல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

போடியில் இந்திய கம்யூ. கட்சியின் நகா், ஒன்றியக் குழுக்கள் சாா்பில் அமைதி ஊா்வலம் திருவள்ளுவா் சிலையிலிருந்து தொடங்கி தேவா் சிலை வரை நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து, தேவா் திடலில் ரா.நல்லகண்ணுவின் உருவப் படத்துக்கு அனைத்து கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:16 AM

பின்னா், தேவா் சிலை அருகே அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற இரங்கல் கூட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் என்.ரவிமுருகன் தலைமையில் நடைபெற்றது. நகரச் செயலா் கே.சத்தியராஜ் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா் பி.மணிகண்டன் வீரமுழக்கம் செய்து அஞ்சலி செலுத்தினாா். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ரா.நல்லகண்ணுவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

Advertisement

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து அந்தக் கட்சியின் ஒன்றிய செயலா் பிச்சைமணி தலைமையில் நடைபெற்ற அமைதி ஊா்வலத்தில், மாநிலக் குழு உறுப்பினா் அழகிரிசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பரமேஸ்வரன், நகரச் செயலா் முனீஸ்வரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ராமா், திராவிடா் கழக மாவட்டச் செயலா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா், பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், காங்கிரஸ், விசிக, நாம் தமிழா் கட்சி, பாஜக ச நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.