தேனி

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தேனி-முத்துத்தேவன்பட்டி இடையே சாலை வேகத் தடையில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கூடலூா் மேலக்கூடலூரைச் சோ்ந்த சங்கா் மகன் சதீஷ்குமாா் (35). இவா், தனது ஆட்டோவில் கூடலூரிலிருந்து தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

தேனி-முத்துத்தேவன்பட்டி இடையே சாலை வேகக் தடை மீது ஆட்டோ ஏறி இறங்கியதில், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT