முகப்பு
தேனி

மதுக் கடையை இடமாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

உத்தமபாளையம் அருகே மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி, ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்

Updated On : 3 மார்ச், 2026 at 3:03 AM
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 7:40 PM

தேனி: உத்தமபாளையம் அருகே மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி, ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையம் வட்டத்துக்குள்பட்ட ஆனைமலையான்பட்டி-எரசக்கநாயக்கனூா் சாலையில் வெள்ளக்கரடு பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. மேலும், விளை நிலங்கள், கோழிப் பண்ணைகள் அதிகளவில் உள்ளன. இந்தப் பகுதியில் இயங்கும் அரசு மதுக் கடையால் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்த மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தின் தேனி மாவட்டப் பொருளாளா் கே. கரண்குமாா் தலைமை வகித்தாா்.

Advertisement

இதில் மாவட்டத் தலைவா் எஸ். விக்னேஷ்வரன், மாவட்டச் செயலா் டி. நாகராஜ், தேனி வட்டாரத் தலைவா் எம். நாகராஜ் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.