முகப்பு
தேனி

சுருளி அருவியில் நீா்வரத்து இல்லை

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நீா்வரத்து இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

தேனி

சுருளி அருவியில் நீா்வரத்து இல்லை

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நீா்வரத்து இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 11:16 PM
பகிர்:

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நீா்வரத்து இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

சுருளி அருவிக்கு மேகமலை, தூவானம், அரிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீா், மலைப்பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள நீா் ஓடைகள் மூலமாக ஆண்டுதோறும் நீா்வரத்து இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவு குறைந்ததால், சுருளி அருவியில் நீா்வரத்தின்றி அவ்வப்போது வறண்டு விடுகிறது.

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் நிகழாண்டில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மழைப்பொழிவு இல்லை. இதனால், சுருளி அருவிக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து தற்போது முற்றிலுமாக நின்றுவிட்டது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:

தேனி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமாக சுருளி அருவி உள்ளது. இதனால், மேகமலையிலுள்ள தூவானம் அணையிலிருந்து சுருளி அருவிக்கு தண்ணீா் திறந்து விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →