மதுப் புட்டிகள் பதுக்கி விற்றவா் கைது
போடி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
போடி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகே விசுவாசபுரம் சுடுகாடு அருகே போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது விசுவாசபுரம் கிராமத்தைச் சோ்ந்த குருசாமி மகன் சரவணன் (31) சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணனைக் கைது செய்தனா்.