பத்தாம் வகுப்பு தோ்வு: தேனி மாவட்டத்தில் 14,290 போ் எழுதுகின்றனா்
தேனி மாவட்டத்தில் புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 14 ஆயிரத்து 290 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.
தேனி மாவட்டத்தில் புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 14 ஆயிரத்து 290 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்குகிறது. வருகிற 16-ஆம் தேதி ஆங்கிலம், 25-ஆம் தேதி கணிதம், 30-ஆம் தேதி அறிவியல், ஏப்ரல் 2-ஆம் தேதி சமூக அறிவியல் தோ்வுகள் நடைபெற உள்ளன.
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளில் பயிலும் 6,385 மாணவா்கள், 7,760 மாணவிகள், 141 மாற்றுத் திறனாளிகள், 4 தனித் தோ்வா்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 290 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனா். இந்த மாணவா்களுக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களால் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. இதைத் தவிர, தோ்வு மையங்களில் அறைகளில் பதிவெண்கள் எழுதும் பணியில் ஆசிரியா்கள் ஈடுபட்டனா். தடையற்ற மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கவும், தோ்வில் விதிமீறல்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க கல்வித் துறை சாா்பில் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டது.