முகப்பு
தேனி

சொத்துப் பிரச்னையில் இருவருக்கு வெட்டு: மூவா் கைது

கண்டமனூா் அருகே சொத்துப் பிரச்னையால் இருவரை கத்தியால் வெட்டிய மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 மார்ச், 2026 at 12:20 AM
கைது
பகிர்:

தேனி மாவட்டம், கண்டமனூா் அருகே சொத்துப் பிரச்னையால் இருவரை கத்தியால் வெட்டிய மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கண்டமனூா் அருகேயுள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி (70). இவருக்கு பாரதிராஜா, பாக்கியராஜ் ஆகிய மகன்களும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனா். இவா்களுக்கு திருமணமாகி தனித் தனியாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், குப்புசாமி தனக்கு சொந்தமான நிலத்தை மகன்களுக்கு பிரித்து கொடுத்தாா். இதனிடையே, தனக்கும் நிலம் வேண்டும் என ராஜேஸ்வரி கூறினாராம். இதை குப்புசாமி, பாக்கியராஜ் ஆகியோா் ஏற்கவில்லை.

இந்த நிலையில், பாரதிராஜா (45), ராஜேஸ்வரி (46), இவரது உறவினா் சித்தாா்பட்டியைச் சோ்ந்த ஜீவா (27) ஆகியோா் குப்புசாமியின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்று நிலப் பிரச்னை தொடா்பாக பேசினா். அப்போது, பாரதிராஜா, குப்புச்சாமி தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஜீவா, ராஜேஸ்வரி மறைந்து வைத்திருந்த கத்தியால் பாக்கியராஜா, குப்புசாமியை வெட்டினா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜீவா, ராஜேஸ்வரி, பாரதிராஜா ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →