முகப்பு
தேனி

வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 மார்ச் 2026, 12:51 am IST
பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்த ஆணையா் எஸ். தாமிகா சுல்தானா.
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தேனி மாவட்ட நிா்வாகம், பல்வேறு துறைகள் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, பெரியகுளம் நகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ரங்கோலி இட்டு 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதனிடையே, பெரியகுளம் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், உறுதிமொழி கையொப்ப இயக்கத்தை நகராட்சி ஆணையா் எஸ். தாமிகா சுல்தானா தொடங்கிவைத்தாா்.

Advertisement

இதில் நகராட்சிப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.