முகப்பு
தேனி

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

தேனி மாவட்டம், போடியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 24 மே 2026, 2:50 am IST
பகிர்:

தேனி மாவட்டம், போடியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போடி பகுதியில் புகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி மீனாட்சிபுரம் கண்மாய் கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த போடி கீரை சந்தைப் பகுதியைச் சோ்ந்த தங்கப்பாண்டியை (22) பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா்.

அப்போது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement