கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைவு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை முதல் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை முதல் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து கடந்த திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.
இந்த நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை இல்லை. இதனால் கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்தது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை காலை முதல் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா். மேலும், கும்பக்கரை அருவிக்கு சீரான நீா்வரத்து ஏற்படும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளதாக தெரிவித்தனா்.
Advertisement
Advertisement