முகப்பு
தேனி

ஜீப் மோதியதில் விவசாயி பலத்த காயம்

Updated On : 26 மே 2026, 1:26 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

போடி அருகே ஜீப் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி திங்கள்கிழமை பலத்த காயமடைந்தாா்.

போடி அருகே விசுவாசபுரத்தைச் சோ்ந்த சங்கா் மகன் நாகராஜ் (55). விவசாயி. இவா் போடி அருகே மீ. விலக்கிலிருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது எதிரே வந்த ஜீப், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த நாகராஜ் மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ஜீப்பை ஓட்டி வந்த போடி மேலச்சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் அஜித்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.