முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் என்.சி.சி. சார்பில் இலவச மருத்துவ முகாம்

தேசிய மாணவர் படையின் 5 தமிழ்நாடு சைகை அணி தத்தெடுத்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நூர்சாகிபுரம் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் என்.சி.சி. சார்பில் இலவச மருத்துவ முகாம்

தேசிய மாணவர் படையின் 5 தமிழ்நாடு சைகை அணி தத்தெடுத்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நூர்சாகிபுரம் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

தேசிய மாணவர் படையின் 5 தமிழ்நாடு சைகை அணி தத்தெடுத்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நூர்சாகிபுரம் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு அணியின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் பிரபாகர்குமார் தலைமை தாங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர், ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.ராஜூ, சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆர்.அலுசோடை ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.சி.சி. அதிகாரி டி.பொன்னியின்செல்வன் வரவேற்றார்.

மருத்துவ முகாமை ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவர் ராதா வெங்கடாச்சலம் தனது குழுவினருடன் வந்திருந்து நடத்தினார். இதில் சுமார் 500 கிராம மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது.

முகாமிற்கான ஏற்பாடுகளை என்.சி.சி. அதிகாரிகள் டி.பொன்னியன்செல்வன், தனபால், முத்துப்பெருமாள், ஜெயக்குட்டி, கணேசன், ராஜ்குமார், கருணாகரன், முத்துக்கிருஷ்ணந், வர்கீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

உறவின் முறை தலைவர் அ.வேலுச்சாமி நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →