இடைநின்ற மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா
பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கான இணைப்புப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கற்றலில் இனிமையை ஏற்படுத்துவதற்காக
விருதுநகர்இடைநின்ற மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா
பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கான இணைப்புப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கற்றலில் இனிமையை ஏற்படுத்துவதற்காக
பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கான இணைப்புப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கற்றலில் இனிமையை ஏற்படுத்துவதற்காக கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கான இணைப்பு மைய சிறப்பு பயிற்சி மற்றும் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் மதுரை மாவட்டம், வைகை அணைக்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர்.இவர்களை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராமசுப்பு வழியனுப்பி வைத்தார்.
அங்கு சென்ற மாணவர்களுக்கு அணையின் தோற்றம், நீர்வரத்து மூலங்கள், பாசன நன்மைகள், நீர்மின் நிலையம், மலர்கள், போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.மாணவர்களுடன் ஆசிரியப் பயிற்றுநர்கள் முருகு திருநாவுக்கரசு, உமா மகேஸ்வரி, பொற்கொடி உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.