விவசாயிகளுக்கு ஆடு வளர்க்கப் பயிற்சி
கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில், குளிர் மற்றும் கோடைகாலத்தில் ஆடு வளர்ப்பு, பராமரிப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில், குளிர் மற்றும் கோடைகாலத்தில் ஆடு வளர்ப்பு, பராமரிப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் அறிவியல் மைய தலைவர் பால்பாண்டி பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்துப் பேசினார்.
ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய தலைவர் தங்கதுரை, ஆடுகளின் வகைகள், வளர்ப்பு ஆடுகளை தேர்ந்தெடுக்கும் முறை, குடில் அமைக்கும் முறை, உணவு தேவை உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தார்.
Advertisement
விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். வேளாண் அறிவியல் நிலைய உளவியல் பேராசிரியர் தீபாகரன், உதவி பேராசிரியர் ராஜேந்திரன், ஜெகதீஸ்வரி, முத்துராமு, உதவியாளர் கவிதா, ரம்யா மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.