முகப்பு
விருதுநகர்

விவசாயிகளுக்கு ஆடு வளர்க்கப் பயிற்சி

கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில், குளிர் மற்றும் கோடைகாலத்தில் ஆடு வளர்ப்பு, பராமரிப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 29 டிசம்பர், 2012 at 2:16 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:36 AM

கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில், குளிர் மற்றும் கோடைகாலத்தில் ஆடு வளர்ப்பு, பராமரிப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

 வேளாண் அறிவியல் மைய தலைவர் பால்பாண்டி பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்துப் பேசினார்.

  ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய தலைவர் தங்கதுரை, ஆடுகளின் வகைகள், வளர்ப்பு ஆடுகளை தேர்ந்தெடுக்கும் முறை, குடில் அமைக்கும் முறை, உணவு தேவை உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தார்.

Advertisement

 விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். வேளாண் அறிவியல் நிலைய உளவியல் பேராசிரியர் தீபாகரன், உதவி பேராசிரியர் ராஜேந்திரன், ஜெகதீஸ்வரி, முத்துராமு, உதவியாளர் கவிதா, ரம்யா மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.