இலவச கண் சிகிச்சை முகாம்
விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை, அருப்புக்கோட்டை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் சாலியர் மகாஜன சங்க நடுநிலைப்பள்ளியில் திங்கள்கிழமை
விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை, அருப்புக்கோட்டை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் சாலியர் மகாஜன சங்க நடுநிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து, இலவசமாக மருந்து, மாத்திரைகளை பெற்றுக்கொண்டனர். 125 பேர் இலவச அறுவை சிகிச்சைக்காக கிருஷ்ணன் கோவில், சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனர் மரியதாஸ், நிர்வாகி முருகன், சங்கரா மருத்துவமனை தலைமை அலுவலர் கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.